பாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு

வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
Published on

சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு காற்றுக்காக வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் படுத்து தூங்கினார்.

இந்த பாலத்தின் அடியில் சென்னை மாநகராட்சி சார்பில் பூங்கா அமைத்து அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக மணல் கொட்ட வந்த லாரியை அதன் டிரைவர் பின்னோக்கி இயக்கியபோது, அங்கு படுத்து தூங்கிய ரமேஷ் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

லாரி சக்கரத்தில் சிக்கிய ரமேஷ், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுகுமார் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com