மூதாட்டி மர்ம சாவு

குஜிலியம்பாறையில் வீட்டில் மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மூதாட்டி மர்ம சாவு
Published on

குஜிலியம்பாறை கிழக்கு காலனி தெருவை சேர்ந்தவர் கருப்பாயி (வயது 72). இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே முகம் சிதைந்த நிலையில் மூதாட்டி மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சத்யபிரபா நேரில் வந்து விசாரணை நடத்தினார். அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் இறந்த கருப்பாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மூதாட்டி எப்படி இறந்தார்? அவரை யாரும் கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com