நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
Published on

நொய்யல் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் பூ வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய பூக்களை வியாபாரிகள் மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.சில வியாபாரிகள் உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை பாக்கெட் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி

கடந்த வாரம் 1 கிலா குண்டுமல்லி ரூ.300-க்கு விற்றது தற்பாது ரூ.1,400-க்கும், சம்பங்கி ரூ.50-க்கு விற்றது ரூ.100-க்கும், அரளி ரூ.160-க்கு விற்றது ரூ.240-க்கும், ரோஜா ரூ.160-க்கு விற்றது ரூ.250-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கு விற்றது ரூ.1,300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கு விற்றது ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கு விற்றது ரூ.1,000-க்கும், காக்கரட்டான் ரூ.200-க்கு விற்றது ரூ.450-ம் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com