நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
Published on

நொய்யல் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் பூ வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் வாங்கிய உதிரிப்பூக்கள் மூலம் பல்வேறு ரகமான மாலைகளையும், தோரணங்களையும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், கோவில் விசேஷ நிகழ்ச்சிகள் இருப்பதாலும் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.700-க்கு விற்றது தற்போது ரூ.1,800-க்கும், சம்பங்கி ரூ.60-க்கு விற்றது ரூ.160-க்கும், அரளி ரூ.120-க்கு விற்றது ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.140- க்கு விற்றது ரூ.280-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கு விற்றது ரூ.1,600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.60-க்கு விற்றது ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கு விற்றது ரூ.1,500-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கு விற்றது ரூ.700-க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com