பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது

பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது
பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது
Published on

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மதுரையில் மிக முக்கியமான பஸ் நிலையங்களில் ஒன்று. இந்தநிலையில், பஸ் நிலையத்தின் முதலாவது நடைமேடை பகுதியில் மேற்கூரை சிமெண்டு பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ் நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளதால் அதனை உடனடியாக சீரமைத்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டாமல் தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com