

சென்னை,
சென்னையில் அண்ணா நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது. அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். வரும் 23ம் தேதி நடக்கும் பேரணியுடன் போராட்டம் முடிவு பெறாது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.