கிணற்றுக்குள் விழுந்த மாணவி பலி

நத்தம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
கிணற்றுக்குள் விழுந்த மாணவி பலி
Published on

நத்தம் அருகே உள்ள கோட்டையூர் சின்னையம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகள் சரண்யா (வயது 16). இவர், அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது. சரண்யாவுக்கு நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சரண்யாவை நீண்ட நேரம் காணாததால் அவரது உறவினர்கள் தேடினர். அப்போது அவர் கிணற்றுக்குள் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com