மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

பாகலூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான்.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
Published on

ஓசூர்

பள்ளி மாணவன்

பாகலூர் அருகே உள்ள கொடியாளத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 14). இவன் கொத்தப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் மாணவன் சந்தோஷ் கொடியாளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதையடுத்து அங்கு குளிர்சாதனபெட்டியை திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்தோசை மின்சாரம் தாக்கியது.

விசாரணை

இதில் சந்தோஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com