கல்லூரி மாணவிகளை அநாகரிகமாக பேசிய டீனுக்கு அதிர்ச்சியளித்த மாணவர்கள்

விருதுநகரில், மாணவிகளை அநாகரீகமான முறையில் பேசிய கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகளை அநாகரிகமாக பேசிய டீனுக்கு அதிர்ச்சியளித்த மாணவர்கள்
Published on

விருதுநகர்,

விருதுநகரில், மாணவிகளை அநாகரீகமான முறையில் பேசிய கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில், பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள், நண்பனின் சகோதரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.

2 நாள் விடுமுறைக்கு பிறகு கல்லூரி வந்த மாணவிகளை, கல்லூரி முதல்வர் சந்திரா என்பவர், அருவெறுக்கத்தக்க முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com