பஸ் சக்கரத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி - பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த சோகம்..!

திருவள்ளூரில் அரசு ஊழியர் பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி அரசு ஊழியர் பலி - பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த சோகம்..!
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் வசித்து வருபவர் ஆறுமுகம் (58). இவர் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணவாள நகரில் உள்ள சென்டர் மீடியாவில் ஏறி இறங்க முயன்றபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பூந்தமல்லியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் வலது புற முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com