குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி தொடங்கியது

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி தொடங்கியது
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கும் பணி தொடங்கியது
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மணல்மேடு சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பூம்புகார், வானகிரி, மேலையூர், பெருந்தோட்டம் ,திருவெண்காடு, கீழமூவர்க்கரை, திருநகரி உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் வைத்தீஸ்வரன் கோவில் மணல்மேடு சாலையில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகில் உள்ள கால்வாயில் கலந்து வருகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் குடிநீர் வடிகால் வாரிய துறை சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணியாளர்களைக் கொண்டு குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உடனடி நடவடிக்கை எடுத்த குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், உறுதுணையாக இருந்த தினத்தந்தி நாளிதழுக்கும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com