விபத்தில் தொழிலாளி பலி

பெத்தநாயக்கன்பாளையம் அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.
விபத்தில் தொழிலாளி பலி
Published on

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தண்ணீர்பந்தல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சோமன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சோமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com