தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை

தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை
Published on

தகராறு

திருச்சி அருகே சோமரசம்பேட்டை போலீஸ் சராகத்திற்கு உட்பட்ட கே.சாத்தனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 45). கூலித்தொழிலாளியான இவர் மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவரிடம் என்.சாத்தனூரை சேர்ந்த மணிவேல் என்ற பால்கார மணி(55) என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டுமாறு கூறி, பணம் கொடுத்துள்ளார்.

அதன்படி ஆனந்த் மரங்களை வெட்டிய பின்னர், மீதமிருந்த ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் 2 பருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிவேல், தனது மகன்கள் ராஜ்குமார்(30), தினேஷ்(25) ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அடித்துக்கொலை

இதைத்தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் உருட்டுக்கட்டை மற்றும் விறகு கட்டையால் ஆனந்தை தலையிலும், முகத்திலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com