அக்காள், தங்கை வீட்டில் நகை-பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி பகுதியில் அடுத்தடுத்து அக்காள், தங்கை வீட்டில் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
அக்காள், தங்கை வீட்டில் நகை-பணம் திருட்டு
Published on

நாட்டறம்பள்ளி பகுதியில் அடுத்தடுத்து அக்காள், தங்கை வீட்டில் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி (வயது 62). இவருடைய மகன் கார்த்திகேயன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா, மாமியார் மோகனேஷ்வரி ஆகிய இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மஞ்சுளா தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

நகை-பணம்

பக்கத்து தெருவில் மோகனேஷ்வரியின் தங்கை லட்சுமிகாந்தகம் (60) வசித்து வருகிறார். இவர் உறவினருடைய வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் லட்சுமி காந்தகம் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com