தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சடத்தில் கைது

கோவில்பட்டி பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களான கோவில்பட்டி, மூப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் மகன் முகில்ராஜ் (வயது 19) மற்றும் கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (23) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (20.04.2025) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






