கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை

வல்லநாட்டில் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டுள்ள காவலர்களிடம், அசாதாரண சூழ்நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின் போதும் கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்று எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் கூறினார்.
கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை
Published on

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் இன்று தூத்துக்குடி, வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் கமாண்டோ பயிற்சியை பார்வையிட்டார். அப்போது அவர், கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு வரும் காவலர்களிடம், அசாதாரண சூழ்நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின் போதும் கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்றும், கமாண்டோ பயிற்சியை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com