தூத்துக்குடி: போலீசார் தலைமையில் மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி


தூத்துக்குடி: போலீசார் தலைமையில் மாணவர்கள் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
x

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "போதையில்லா தமிழகம்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் அடிப்படையில் அதனை பரப்பும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் பொது இடங்கள் என மொத்தம் 21 இடங்களில் உள்ள காவல்துறை பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்ற காவல்துறையினர் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக நேற்று (28.5.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி தாளமுத்துநகர், பெரியசெல்வம்நகர் மற்றும் பிரையண்ட்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வைத்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாவண மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கபட்டது.

இந்த விளையாட்டு பயிற்சியின் தொடக்க நிகழ்வாக மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியளிக்கும் காவல்துறையினர், தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து பின்னர் விளையாட்டு பயிற்சி துவங்கப்பட்டது.

1 More update

Next Story