திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

களக்காடு பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கடம்போடு வாழ்வை சேர்ந்த நம்பி (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நம்பியை, களக்காடு போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





