திருப்பூர்: ரியல் எஸ்டேட் அதிபர் வீடு புகுந்து குத்திக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்...!

ஊத்துக்குளி அருகே ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் மர்மநபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
திருப்பூர்: ரியல் எஸ்டேட் அதிபர் வீடு புகுந்து குத்திக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்...!
Published on

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து முதலிபாளையம் சிட்கோ செந்தில் நகரில் பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவரது மகன் பாலசுப்பிரமணியம்(வயது31).

இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். திருமணமான இவர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக செந்தில் நகரில் உள்ள தனது அப்பா அம்மாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் பழனி கோவிலுக்கு சென்று சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தது. இதனைப் பார்த்த பெற்றேர் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த பாலசுப்பிரமணியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்பிரமணியம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com