டி.என்.பி.எஸ்.சி. குரூப்1 முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வில் கலந்துகொள்ள பதிவு செய்யலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்1 முதல் நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குரூப்-1 தேர்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான முதல்நிலை தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வருகிற 10, 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

பதிவு செய்துகொள்ளலாம்

எனவே இம்மாதிரி தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 80983 08754 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது கள்ளக்குறிச்சி, எண் 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது குரூப்-1 தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், புகைப்படம் ஆகிய விவரங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களின் விவரத்தை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் மாதிரி தேர்வுகளில் வருகிற 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com