காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
Published on

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அப்பாராவ் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 33). இவர் பினாயில், சோப்பு, விற்பனை செய்து வந்தார். இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஸ்ரீநதி, கவிஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராஜி மனமுடைந்து, வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராஜியின் மனைவி யுவராணி பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com