நெகமம் அருகே கார் மோதி வியாபாரி பலி

நெகமம் அருகே கார் மோதி வியாபாரி பலி
நெகமம் அருகே கார் மோதி வியாபாரி பலி
Published on

நெகமம்

நெகமம் அடுத்த செட்டிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). இவர் சீமார் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவா தனது மோட்டார் சைக்கிளில் நெகமத்தில் இருந்து பல்லடம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். சாலைப்புதூர் அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் ஒன்று, ராமசாமி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். மேலும் காரில் வந்த திருப்பூரை சேர்ந்த பாத்திமாபேகம் (27), ரிக்வானா (37), சலீம் நிஷா (34), நிஷார் அலி (34), பாட்சா (54) ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் 5 பேரும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com