நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்: 10-ம் வகுப்பு மாணவன் குளத்தில் மூழ்கி சாவு - போலீசார் விசாரணை

நண்பர்களுடன் குளிக்க சென்ற போது 10-ம் வகுப்பு மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுடன் குளிக்க சென்ற போது பரிதாபம்: 10-ம் வகுப்பு மாணவன் குளத்தில் மூழ்கி சாவு - போலீசார் விசாரணை
Published on

சென்னை அடுத்த மணலி சின்ன சேக்காடு மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் மனோ (வயது 17). மணலியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று நண்பர்களுடன் மணலி அடுத்த பல்ஜிபாளையம் படவேட்டம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார். அப்போது இதைக்கண்ட சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்ற நிலையில், மூச்சு திணறி மனோ பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சகமாணவர்கள் மனோவின் பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com