

திருச்சி,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் சமயபுரம் கோவில் அலுவலர், வடபழனி கோவில் இளநிலை உதவியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வடபழனி கோவில் இளநிலை உதவியாளர், சில நிர்வாக ஒழுங்கின்மைகளில் ஈடுபட்டதாகவும் சமயபுரம் கோவில் அலுவலர் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். கோவில்களில் முறைகேடுகளைத் தடுத்து, பக்தர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.