அடையாளம் தெரியாத ஆண் பிணம்

பூதலூர் அருகே கல்லணைக்கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

பூதலூர் அருகே உள்ள சின்னகாங்கேயம் பட்டி கல்லணைக் கால்வாயில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் சுரக்குடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் (வயது 38) புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com