கோவில்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

கோவில்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கோவில்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
Published on

அறந்தாங்கி அருகே கோவில்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் வந்திருந்தன. 108 வீரர்கள் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டில் கயிற்றில் ஒரு காளையை கட்டிவிட்டு அதை அடக்க 9 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களையும் களத்தில் இறக்கவிட்டு 25 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் வீரர்கள் காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்க உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com