பாறை உடைக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

குழித்துறை அருகே பாறை உடைக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்
பாறை உடைக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்
Published on

களியக்காவிளை,

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குழித்துறையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாறை கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி வாகனத்தில் பொருத்திய எந்திரம் மூலம் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. இதையடுத்து பாறை உடைக்க பயன்படுத்திய வாகனத்த போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com