கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் தேர்வு எழுதினர். 1,709 பேர் தேர்வு எழுதவரவில்லை.
கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் எழுதினர்
Published on

திருவாரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்து தேர்வை 5,313 பேர் தேர்வு எழுதினர். 1,709 பேர் தேர்வு எழுதவரவில்லை.

கிராம உதவியாளர்

கடந்த அக்டோபர் மாதம் கிராம உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஆண்-பெண் உள்பட இரு பாலரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 7-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.திருவாரூர் மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகத்தில் உள்ள 167 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்காக 7,022 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வு எழுத வரவில்லை

இந்த நிலையில் எழுத்து தேர்வு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 9 மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை 5,313 பேர் எழுதினர். 1,709 பேர் தேர்வு எழுதவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com