கிராம சபை கூட்டம்

வீரபாண்டியன்பட்டினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன் பட்டினம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிரசாத்நகர் சமுதாய நலக் கூடத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.

யூனியன் ஆணையர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதிஸ் வி.ராயன், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், பஞ்சாயத்து செயலாளர் பட்டுகனி, ரேஷன் கடை ஊழியர் செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com