சிவகாசி பகுதியில் கிராம சபை கூட்டம்

சிவகாசி பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி பகுதியில் கிராம சபை கூட்டம்
Published on

காந்தி ஜெயந்தியையொட்டி சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் லோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கலைமணி, பஞ்சாயத்து செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலாமத்தூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் விஜயாசின்னமருது தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் மணிகண்டன், பஞ்சாயத்து செயலர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் பாண்டியம்மாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் கண்ணன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com