ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்...!
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com