செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Published on

சென்னை,

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியை கொண்டது. மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி 3,064 மில்லியன் கன அடி நீர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 780 கன அடியாக உள்ள நிலையில், ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com