கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணையில் இருந்து வெளியேறும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் காற்றில் பறந்து செல்கின்றன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,410 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் சின்ன கொள்ளு, பெத்த கொள்ளு, தட்டனப்பள்ளி உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேறும் நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் காற்றில் பறந்து செல்கின்றன. இந்த சூழலில், பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






