சீர்காழியில், குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சீர்காழியில், குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சீர்காழியில், குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக சித்தமல்லி கொள்ளிடம் ஆறு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மூழ்கி உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் உள்ளூரில் எடுக்கப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com