"கிறிஸ்தவ, சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள்" - மு.க.ஸ்டாலின் பேச்சு

கிறிஸ்தவ, சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
"கிறிஸ்தவ, சிறுபான்மை மக்களுடன் துணையாக இருப்பவர்கள் நாங்கள்" - மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை,

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் குடிலை அவர் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

''எனது மனதிற்கு நெருக்கமான விழா இது. திமுக அரசு கிறிஸ்தவ, சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது. கிறுஸ்தவ நல்லிணக்க இயக்கத்தை சேர்ந்தவரை எம்.எல்.ஏ ஆக்கி இருக்கிறோம். இனிகோ பிரபாகர், இப்போது எம்.எல்.ஏ நாளை எப்படி இருப்பாரோ என தெரியாது. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது; இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை''.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com