

சென்னை,
மேகதாதுவில் அணை கட்டினால் உபரி நீர் கிடைக்காது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறி வருகிறார்.
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நடந்த தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் கொண்டு வரப்படுகிறது. அந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற உள்ள அலுவல்கள் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முழுவிவரம்:-