234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இந்திய தேர்தல் ஆணையம் வெளியீடு
Published on

அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 922 பேர் (87.37 சதவீதம்) வாக்களித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 214 பேர் ஆண்கள், 1 லட்சத்து ஆயிரத்து 708 பேர் பெண்கள்.

குறைந்தபட்சமாக, சோழிங்கநல்லூரில் மொத்தமுள்ள 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 வாக்காளர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 948 பேர் (55.51 சதவீதம்) வாக்களித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் ஆண்கள், 1 லட்சத்து 91 ஆயிரத்து 384 பேர் பெண்கள். 19 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் (72.81 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com