

தாயில்பட்டி,
வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஊர் பெயரை தெரிந்து கொள்வதற்காக சாலை ஓரத்தில் ஊரின் பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கும். அதனை பார்த்து வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் இடத்தை அறிந்து கெள்வார்கள். சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் கீழத்தாயில்பட்டியில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அழிந்துள்ளது. இதன் காரணமாக இந்த பாதை எங்கே செல்கிறது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.