ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? பாதுகாவலர் வீரப்பெருமாள்

அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோவில் சிசிடிவி அகற்றம் ஏன்? பாதுகாவலர் வீரப்பெருமாள்
Published on

சென்னை,

அப்பல்லோ மருத்துவமனையில் அரசு மற்றும் காவல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் விதிமுறைகளின் படியே சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கப்படுவதாக மருத்துவமனை சாட்சியங்கள் வாக்குமூலம்.

கேமிராக்களை யாரும் அகற்ற சொல்லவில்லை - மருத்துவமனை சாட்சியங்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டது. யார் உத்தரவின்படி அணைக்கப்பட்டது என தெரியாது என ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த வீரப்பெருமாள் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை ஸ்கேனுக்கு அழைத்து செல்லும் போது மட்டும் சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்படும் - மருத்துவமனை நிர்வாகி சுப்பையா விஸ்வநாதன்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் ராம்மோகனராவ் அறிவுறுத்தலின் படியே சிசிடிவி கேமிராக்கள் அணைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமிராக்கள் செயலிழக்கப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் ஏறபடவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com