டீ குடிக்க பணம் தர மறுத்த மனைவி... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

பிரகாஷ் மனைவியிடம் டீ குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தராமல் மறுத்ததாக கூறப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35 வயது). இவர், பெருங்கட்டூர் கிராமத்தில் நடைபெற்ற நாடகத்தை பார்ப்பதற்காக தனது மனைவி சுதாவுடன் சென்றார். அப்போது சுதாவிடம் டீ குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தராமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பிரகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சுதா மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com