செங்கோட்டையனின் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் கோரிக்கை நிறைவேறுமா? - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்


செங்கோட்டையனின் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் கோரிக்கை நிறைவேறுமா? - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 15 Sept 2025 11:21 AM IST (Updated: 15 Sept 2025 11:33 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அதிமுக வாக்குகளை பெறலாம் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், "அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கோரிக்கை நிறைவேறுமா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் முடிவு எடுப்பார்" என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடியது குறித்து கேட்கிறீர்கள். விஜய் அரசியல் வருகையால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அ.தி.மு.க.வுக்கான ஓட்டு அப்படியே இருக்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர். படத்தை பார்த்தாலே அ.தி.மு.க.வுக்கு ஓட்டு விழும். நடிகர் விஜய் முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து 'ஸ்டாலின் அங்கிள்' என்று கூறினார். பிறகு, 'ஸ்டாலின் சார்' என்றார். என்னிடம் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பேன். 'ஸ்டாலின் சாத்தான் சார்', அவரது மகன் உதயநிதியை பார்த்து, 'உதயநிதி குட்டிச்சாத்தான் சார்' என்று கூற ஆலோசனை வழங்கியிருப்பேன்" என்றார்.

1 More update

Next Story