கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை

என்.ஜி.ஓ.காலனி அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

மேலகிருஷ்ணன்புதூர்:

என்.ஜி.ஓ.காலனி அருகே கடன் தெல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மணிக்கட்டிபொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வலைக்கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை எனத்தெரிகிறது. மேலும், முத்துலட்சுமி கடன் தொல்லையால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி மணிக்கட்டிபொட்டல் முத்தாரம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் விஷம் குடித்து மயக்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர்ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com