பண்ருட்டியில் விஷம் குடித்து பெண் தற்கொலை

பண்ருட்டியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டா.
பண்ருட்டியில் விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

பண்ருட்டி, 

பண்ருட்டி எல்.என்.புரம் ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் பாபு(வயது 42). இவருடைய மனைவி சுதா(34). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சுதா நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுதாவை பரிசோதனை செய்த டாக்டாகள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com