விழுப்புரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

விழுப்புரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனி மனைவி தேவி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பழனி, வெளியூரில் கோழி குஞ்சு வியாபாரம் செய்து அதில் கிடைத்த பணத்தை தனது மனைவி தேவியின் வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். அந்த பணத்தை தேவி செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனி, தனது மனைவி தேவியிடம் கணக்கு விவரங்களை கேட்டு திட்டியதால் மனமுடைந்த தேவி, மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தேவி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com