தீக்குளித்து பெண் தற்கொலை

ஆரணியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

ஆரணி

ஆரணி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மாதவி (வயது 50). இவர்களுக்கு சந்தியா, நதியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாதவி நீண்ட நாட்களாக உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று தன் மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com