உத்திரமேரூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி - போலீசார் விசாரணை

உத்திரமேரூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
உத்திரமேரூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி - போலீசார் விசாரணை
Published on

உத்திரமேரூர் ஒன்றியம் புத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல். (வயது 48). பெயிண்டர். இவரது மனைவி அலமேலு (42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று அலமேலு தனது கணவரிடம் துணி துவைத்து விட்டு வருவதாக கூறி விட்டு துணியை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள விவசாய கிணற்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பி வராததால், தணிகைவேல் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, கிணற்றின் மேலே அவரது செருப்பும் துணியும் இருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார்

இந்த நிலையில், மாகரல் போலீஸ் நிலையத்திற்கும், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி பெண்ணின் உடலை தேடினர். 5 மணி நேர தேடலுக்கு பின்னர், அலமேலுவை பிணமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாகரல் போலீசார் அவர், தவறி விழுந்து இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com