மொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

திருவள்ளூர் அருகே மொபட்டில் இருந்து கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம் பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
மொபட்டில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
Published on

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 50). இவர் நேற்று காலை தனது மொபட்டில் திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் பகுதிக்கு உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருப்பாச்சூர் நெடுஞ்சாலையில் தாட்கோ நகர் அருகே வந்து கொண்டிருந்த போது அதே மார்க்கமாக வந்த லாரி ஒன்று மோபட்டில் உரசியது. இதில் சாமுண்டீஸ்வரி நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார்.

அப்போது லாரியின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத் திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் உயிரிழந்த சாமுண்டீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட்டில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com