கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தரும்படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தரும்படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடத்தப்பட்ட மகளை மீட்டுத்தரும்படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
Published on

விழுப்புரம் கே.கே.சாலை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்து, தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதன் பின்னர் அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்,

பிளஸ்-1 படிக்கும் எனது இளைய மகளை கோனூரை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் என்பவர், காதலிப்பதாக கூறி கடத்திச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக, கடந்த மார்ச் 9-ம் தேதி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகளையும் மீட்டுத்தந்தனர். பிறகு, எனது மகளை திருக்கோவிலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தேன். இந்நிலையில் மீண்டும் சந்தோஷ் அந்த கல்லூரிக்கு சென்று, எனது மகளை கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார், எனது மகளை மீட்டுத்தராமல், அந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீஸ் அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com