வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை

திங்கள்கிழமை நடைபெற உள்ள காவல்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, தமிழக முதல்-அமைச்சர் விஜய் காவல்துறையினருக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் என அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மகளிர் காவலர்கள், தங்களுக்கு வார விடுமுறையை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைக்கு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வாரவிடுமுறையை முறையாக அமல்படுத்த மகளிர் காவலர்கள் கோரிக்கை

மரியாதை செலுத்திய பிறகு, அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் காவலர்களிடம், "உங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா?" என அமைச்சர் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த மகளிர் காவலர்கள், "பெண் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறையை எந்தவிதத் தடங்கலுமின்றி முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

காவல்துறைக்கான மானியக் கோரிக்கையில் புதிய திட்டங்கள்

மகளிர் காவலர்களின் கோரிக்கையைக் கேட்ட அமைச்சர் ஸ்ரீநாத், "உங்களது கோரிக்கை உடனடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். திங்கள்கிழமை நடைபெற உள்ள காவல்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, முதல்-அமைச்சர் காவல்துறையினருக்காக மேலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார்" என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com