விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தூசி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருக பகவந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 35), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விஜயனின் தந்தை அன்புமணி தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com